/* */

திருச்சி ரெயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சிக்கு ரெயிலில் கடத்திவரப்பட்ட ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

திருச்சி ரெயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் (பைல் படம்)

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்தரெயில் திருச்சி ரெயில் நிலையத்தில் வந்து நின்றபோது,ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு பெட்டியின் கழிவறைக்கு அருகே 2 சாக்கு மூட்டைகள் இருந்ததை கண்டனர். இதுகுறித்து பயணிகளிடம் விசாரித்தபோது, அந்த சாக்கு மூட்டைகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை. உடனே அவற்றை ரெயிலில் இருந்து கீழே இறக்கி சோதனை நடத்தினார்கள். அதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.அதன்மதிப்பு ரூ.88 ஆயிரம் இருக்கும்.

ரெயிலில்புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது உடனடியாகதெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 8 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த