/* */

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளிகள் உள்பட 3 பேர் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளிகள் உள்பட 3 பேர் தற்கொலை
X

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாத்திரகாரதெரு பகுதியை சேர்ந்தவர் சுல்தான்கான். இவரது மகன் மொய்தீன்கான் (வயது29). இவர், பஸ் பாடி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி நூர்ஜகான் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மொய்தீன்கான், மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் கோபித்துக்கொண்டு கடந்த மாதம் நூர்ஜகான் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தோகைமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொய்தீன்கான் தோகைமலை சென்று தனது மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் அருள்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சகாயராஜ். (47). கட்டிட தொழிலாளியான இவர் குடும்ப தகராறில் கடந்த 5 மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல், திருச்சி உறையூர் கீழவைகோல்கார தெருவை சேர்ந்தவர் சங்கர் (29). கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த சங்கருக்கு காளீஸ்வரி (27) என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Updated On: 4 Jan 2022 4:38 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  2. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  5. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  7. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  8. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?