/* */

திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த  3 பேர் கைது
X

திருச்சி மாநகர் அரியமங்கலம் திடீர் நகர், கோல்டன் நகர் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், போதை மாத்திரைகளை விற்ற 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருச்சி வரகனேரி சந்தானபுரம் அசன்அலி (வயது 22), சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்த அகஸ்தியர் (வயது 22), அரியமங்கலம் காமராஜர் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த முஷரப் (வயது 20) என்பதும், இவர்கள் அந்த பகுதிகளில் சிறுவர்களிடம் போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வி.ஏ.ஓ. சூசை ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 27 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...