திருநாவுக்கரசர் எம்.பி. பிறந்தநாளில் திருச்சி காங்கிரசார் ரத்த தானம்

திருநாவுக்கரசர் எம்.பி. பிறந்தநாளில்   திருச்சி  காங்கிரசார் ரத்த தானம்
X

திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. பிறந்த நாளையொட்டி கவுன்சிலர் ரெக்ஸ் ரத்த தானம் செய்தார்.

திருநாவுக்கரசர் எம்.பி. பிறந்த நாளையொட்டி திருச்சியில் காங்கிரசார் ரத்த தானம் செய்தனர்.

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா இன்று திருச்சியில் காங்கிரசாரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டிகாங்கிரசார் ரத்த தானம் செய்தனர். ரத்ததான முகாமினை கவுன்சிலர் ரெக்ஸ் தலைமை தாங்கி, ரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார்.

முகாமில் வழக்கறிஞர் சந்திரன், பொறியாளர் பேட்டரிக், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சீலாசெலஸ், பஞ்சாயத்து ராஜ் அண்ணாதுரை, அன்பில் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு அச்சார்சிங், ஓ .பி. சி. சுப்பையா,வினோத், கலை பிரிவு பெஞ்சமின், டி.டி.இ. சரவணன், மணிவேல், அண்ணாதுரை, காமராஜ், விஜயலட்சுமி, ரஹ்மத்துல்லா, பாலா, பிரேம் மற்றும் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

Tags

Next Story
ai in future agriculture