முதியவர் தீ குளித்து தற்கொலை முயற்சி

முதியவர் தீ குளித்து தற்கொலை முயற்சி
X

பைல் படம்

திருச்சி கோட்டை பகுதியில் முதியவர் தீ குளித்து தற்கொலை முயற்சி செய்தார்.

திருச்சி பெரிய கடை வீதி சமஸ்பிரான் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). இவர் வயது முதிர்வு காரணமாக வும், வருமானம் இல்லை என்பதாலும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டு வாசலில் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த, அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அனைத்து, அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story