Begin typing your search above and press return to search.
குடிநீரை சப்ளை செய்து கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென மயங்கி விழுந்து சாவு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடிநீரை சப்ளை செய்து கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நேசகுமார் (வயது 57). இவர் குடிநீர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஓட்டலில் லாரி டேங்கில் இருந்த குடிநீரை சப்ளை செய்து கொண்டிருந்தார். அப்போது நேசகுமார் திடீர் என மயங்கி விழுந்தார்.
உடனே அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.