/* */

திருச்சி தென்னூர் உழவர் சந்தை குப்பைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மலை போல் குவிந்துகிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை

HIGHLIGHTS

திருச்சி தென்னூர் உழவர் சந்தை குப்பைகளை அப்புறப்படுத்த கோரிக்கை
X

திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த திருச்சி தென்னூர் அண்ணா நகர், உழவர் சந்தை இன்று மிகுந்த சுகாதாரக் கேட்டிற்கு வழிவகை செய்யுமளவில் மாறி வருகிறது. பெருமளவில் குப்பைகள் சேர்ந்து சந்தைப் பகுதி ஒரு குப்பைமேடாக காட்சியளிக்கிறது.

துப்புரவு பணியாளர்கள் முறையாக சுத்தம் செய்ய வருவது இல்லை. அப்பகுதியை தூய்மைபணியாளர்களின் மேற்பார்வையாளர்களும் கண்டுகொள்வதில்லை. பலமுறை புகார் செய்தும் பலனில்லை என்று அங்குள்ள வியாபாரிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இனிவரும் பண்டிகை காலங்களில் பெருமளவு மக்கள் காய்கறிகள் வாங்க இப்பகுதிக்கு வார வாய்ப்புள்ளது. ஏற்கனவே கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் இப்பகுதியை முறையாக சுத்தம் செய்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் தெரிவித்தனர்.

எனவே மாநகராட்சி ஆணையர் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சந்துரு என்கிற சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 19 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!