டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர்  திருச்சியில் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் திருச்சியில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள விக்னேஷ் ஹோட்டல் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற அறிவிப்பின் மீது வெள்ளை அறிக்கை கேட்ட குருசரவணன் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்திய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story