ரூ.40 ஆயிரம் அபராத தொகை மோசடி செய்த திருச்சி கோர்ட்டு ஊழியர் கைது
திருச்சி மாவட்டத்தில் நடமாடும் (மொபைல்) கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இதில் மாஜிஸ்திரேட்டாக கோபாலகண்ணன் பணியாற்றி வருகிறார். நடமாடும் கோர்ட்டின் இளநிலை உதவியாளராக, திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு (வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார்.
நடமாடும் கோர்ட்டு மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் விசாரிக்கப்பட்ட ஆன்லைன் அபராததொகை வரவு வைக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் கடந்த 4 மாதத்திற்கான ஆன்லைன் அபராதத்தொகை ரூ.40 ஆயிரத்தை போலி ஆவணம் மற்றும் போலி முத்திரை பதித்து வங்கியில் அளித்து, அத்தொகையை இளநிலை உதவியாளர் பிரபு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு கோபாலகண்ணன்,மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu