/* */

திருச்சியில் திருட்டு காரில் சென்னைக்கு சவாரி ஏற்றியவர் கைது

திருச்சியில் திருட்டு காரில் சென்னைக்கு பயணிகளை சவாரி ஏற்றிக்கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் திருட்டு காரில் சென்னைக்கு சவாரி ஏற்றியவர் கைது
X

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சுதாகர் (வயது 40) என்பவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே காரை நிறுத்திக் கொண்டு சென்னைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த மத்திய பஸ் நிலைய வாடகை கார் ஓட்டுனர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கண்டோன்மெண்ட் போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

இந்த நிலையில் சுதாகர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வைத்து இருந்த கார் திருட்டு கார் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் வேளாங்கண்ணியில் கார் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது காரை திருடி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சுதாகரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 Nov 2021 2:13 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?