திருச்சியில் மது குடித்ததை மகன் கண்டித்ததால் தந்தை தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் மது குடித்ததை   மகன் கண்டித்ததால் தந்தை தூக்கிட்டு தற்கொலை
X
திருச்சியில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததை மகன் கண்டித்ததால் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி வரகனேரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 58). குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரின் மகன் பிரகாஷ் கண்டித்தார். இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடம் சென்று தற்கொலை செய்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!