/* */

திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை மனு

திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை மனு
X
திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி மனு கொடுக்க வந்த சமூக நீதி பேரவையினர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது சமூக நீதி பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் வந்து கொடுக்கப்பட்ட மனுவில்

ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு அரியாவூர் ஊராட்சி அல் அமீன்நகர்,குலாம் அலிகான் நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த குடியிருப்புகள் சோமரசம் பேட்டை தோகைமலை சாலையில் அரியாவூர் ஒத்தக்கடை பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ளது.

இங்கு ஒரு டாஸ்மாக மது பான கடை உள்ளது இந்த கடையில் குடிமகன்கள் மது குடித்து விட்டு தகராறு செய்கிறார்கள். மேலும் அங்குள்ள குடிநீர் குழாய் அருகே அமர்ந்து தண்ணீரை கலந்து குடிப்பதால் பெண்கள் தண்ணீர் பிடிக்க வரமுடியாத நிலை உள்ளது. எனவே இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டு இருந்தது.

Updated On: 11 July 2022 1:28 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...