/* */

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில்  கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடமலைப்பட்டி புதூரில் உள்ள முருகன் கோவில் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டில்களை அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை கண்ட போலீசார் மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

பின்னர் விசாரணை செய்ததில் அவர்கள் நேதாஜி நகரை சேர்ந்த செந்தில் முருகன் (வயது 38), கிருஷ்ணா புரத்தை சேர்ந்த பாலை என்கிற இளமாறன் (வயது 54) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 94 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...