/* */

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி கோட்டை தெப்பகுளம் பகுதியிலும், காந்தி மார்க்கெட் பகுதியிலும் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்த இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது 7 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அலங்கநாதபுரம் பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்றதாக வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 9 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு