/* */

பிரபாகரனை ஆதரித்து பேசியது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்

பிரபாகரனை ஆதரித்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜர் ஆனார்.

HIGHLIGHTS

பிரபாகரனை ஆதரித்து பேசியது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்
X

சீமான் திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக வந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி வந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய சீமான் விடுதலை புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்து பேசினார்.

இது தொடர்பாக அவர் மீது எடமலைப்பட்டிபுதூர் போலீசார் திருச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று சீமான் கோர்ட்டில் ஆஜரானார்.

சீமானுடன் இந்த வழக்கில் மேலும் 40 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு உள்பட 26 பேர் ஆஜரானார்கள் .இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 21ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Updated On: 30 March 2022 1:51 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...