திருச்சி சிந்தாமணி பஜாரில் அனுமதியின்றி செயல்பட்ட மது கூடத்திற்கு சீல்

திருச்சி சிந்தாமணி பஜாரில் அனுமதியின்றி செயல்பட்ட மது கூடத்திற்கு சீல்
X

சிந்தாமணி பஜார் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட மதுக்கூடத்தை (பாரை) தாசில்தார் ரவிசங்கர் பூட்டி சீல் வைத்தார்.

திருச்சி சிந்தாமணி பஜாரில் அனுமதியின்றி செயல்பட்ட மது கூடத்தை, டாஸ்மாக் அதிகாரிகள் இன்று பூட்டி சீல் வைத்தனர்.

திருச்சி மாநகரம் கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட சிந்தாமணி பஜார் பகுதியில், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர் அறிவுரைப்படி இன்று 26-10-2021-ந்தேதி அனுமதியின்றி செயல்பட்ட மதுக்கூடத்தை (பாரை) தாசில்தார் ரவிசங்கர் பூட்டி சீல் வைத்தார்.

மேலும் திருச்சி மாநகர மதுவிலக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story