/* */

திருச்சியில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவக்கம்

திருச்சியில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை இன்று அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் பள்ளி  சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவக்கம்
X

திருச்சியில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணியினை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (3.1.2022) நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து இருபத்தாராயிரத்து நானூறு சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, நகர் நல அலுவலர் டாக்டர் யாழினி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சுப்பிரமணியன், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2022 3:02 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  4. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  5. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  6. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  7. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  8. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  9. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  10. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!