சவுதியில் இறந்த தொழிலாளி உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது
சவுதியில் இறந்த தொழிலாளி ராமர் உடலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் ஏற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 35). இவர் சவுதிஅரேபியா ஜீபைல் என்ற பகுதியில்மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி ராமர் மாரடைப்பால் இறந்துள்ளார். அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிட வேண்டும் என்று ராமரின் குடும்பத்தினர் எஸ்.டி.பி.ஐ. கட்சி ராமநாதபுரம் கிழக்கு, நிர்வாகிகளை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளனர். உடனே ஜீபைல் பகுதியை சேர்ந்த இந்தியன் சோஷியல் போரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். அதன் பலனாகவும், இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த ராமரின் உடல் ஸ்ரீலங்கா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி நிர்வாகிகள் ராமரின் உடலை பெற்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலை சொந்தஊருக்கு அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu