சவுதியில் உயிரிழந்த மகனின் உடலை தமிழகம் கொண்டுவர தாய் கண்ணீர் மனு

சவுதியில் உயிரிழந்த மகனின் உடலை தமிழகம் கொண்டுவர தாய் கண்ணீர் மனு
X
சவுதியில் உயிரிழந்த மகனின் உடலை தமிழகம் கொண்டுவர தாய் கண்ணீருடன் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணாமணி. இவருடைய மகன் ராஜா (வயது 29). இவர் சவுதி அரேபியாவிற்கு இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நடந்த சாலை விபத்தில் ராஜா உயிரிழந்தார். அவரது உடலை தமிழகத்துக்கு அனுப்ப அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து ராஜாவின் தாயார் கண்ணாமணி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து எனது மகன் உடலை தமிழகம் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

Tags

Next Story