/* */

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையத்தை அமைச்சர் நேரு இன்று திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு
X

சமயபுரம மாரியம்மன் கோவிலில் முதலுதவி மருத்துவ மையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் முதலுதவி மருத்துவ மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (02.05.2022) தொடங்கி வைத்தார்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை அளித்திட ஏதுவாகவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இந்த முதலுதவி மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் தினசரிகாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் கல்யாணி, செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகா;கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2022 4:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...