/* */

துபாய் ஓட்டலில் ரூ.1.27 கோடி மோசடி: திருச்சி நபர் மீது போலீசார் வழக்கு

துபாய் ஓட்டலில் பணியாற்றியபோது ரூ.1.27 கோடி மோசடி செய்த திருச்சியை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

துபாய் ஓட்டலில் ரூ.1.27 கோடி மோசடி: திருச்சி நபர் மீது போலீசார் வழக்கு
X

கண்டோன்மெண்ட் நிலையம் (பைல்படம்)

திருச்சி கண்டோன்மெண்ட் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் துபாயில் உள்ள ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் திருச்சியை சேர்ந்த ரவி (வயது 52) என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு ரவி வந்து விட்டார். இந்தநிலையில், ஹோட்டலின் வரவு-செலவு கணக்குகளை ராஜேந்திரன் பார்த்துள்ளார். அப்போது, ரவி ரூ.1 கோடியே 27 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

அந்த பணத்தை திருப்பி தருமாறு ரவியிடம், ராஜேந்திரன் கேட்டுள்ளார். அதற்கு பணத்தை தர முடியாது என ரவி கூறியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ரவி தனது ஆதரவாளரான செங்குறிச்சியை சேர்ந்த கருப்பையாவுடன் சேர்ந்து ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் ராஜேந்திரன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 4:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  3. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  5. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  6. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  7. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  8. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  9. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  10. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...