திருச்சியில் பசுமையாக காட்சி அளிக்கும் மறு நடவு செய்யப்பட்ட மரங்கள்

திருச்சியில் பசுமையாக காட்சி அளிக்கும் மறு நடவு செய்யப்பட்ட மரங்கள்
X

மறு நடவு செய்யப்பட்ட பின் பசுமையாக காட்சி அளிக்கும் மரங்களுடன் அதனை நடவு செய்தவர்கள்.

திருச்சியில் மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் பசுமையாக காட்சி அளிப்பதால் அதனை நடவு செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் அரசு மருத்துவமனை மற்றும் சட்ட கல்லூரி வளாகத்தை நவீனப் படுத்தி பல்வேறு வசதிகளுடன் புதிதாக கட்டடங்கள் கட்டப்படவுள்ள நிலையில் அந்த கட்டடங்கள் கட்டுவதற்கான இடத்தில் புங்கமரம், மரமல்லிமரம் ,வேப்பமரம், உதியமரம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சுமார் 30 க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன .இந்த மரங்களை எந்த பாதிப்பும் இல்லாமல் அதை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.


அதன்படி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேசன் மற்றும் அவரது குழுவினர் இந்த மறு நடவு செய்யும் பணிகளை கோவை மாவட்டத்தை சேர்ந்த கிரின்கேர் சுற்றுச்சூழல் அமைப்பினரிடம் வழங்கினர். இந்த மறு நடவு செய்யும் பணிகளை கிரின்கேர் அமைப்பின் நிறுவனர் சையது தலைமையில் ஆன குழுவினர் மற்றும் மாற்றம் அமைப்பின் குழுவினர் பார்வையிட்டு பணிகளை ஒருங்கிணைத்தனர்.


இதனை தொடர்ந்து அனைத்து மரங்களும் மறு நடவு செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான மரங்கள் மீண்டும் துளிர் விட்டு வளர தொடங்கி மிகவும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இந்த மறு நடவு செய்யப்பட்ட மரங்களை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் பார்வையிட்டனர். திருச்சியில் இந்த பணிகளை சிறப்பாக செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேசன் உதவிப் பொறியாளர் சந்தீப்குமார் மற்றும் கிரின்கேர் அமைப்பின் நிறுவனர் சையது மற்றும் சட்ட கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்து வரும் தூய்மை பணியாளர்கள் லதா ஜெயராணி ,சாவித்ரி, பிலோமின்மேரி ,தங்கையன் குமார், மாரியம்மாள், கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ்,பொருளாளர் வசந்த கோகிலா, ஒயிட் ரோஸ் பொதுநல அமைப்பின் தலைவர் சங்கர் ,அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் அமைப்பு மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர் ஆறுமுகம் ,மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
திருச்சி சுந்தர்ராஜ் நகரில் கொண்டாடப்பட்ட பல்சமய நல்லுறவு தீபாவளி திருவிழா
சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவருக்கு சிறை மற்றும் அபராதம்
பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: இரா. முத்தரசன் பேட்டி
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பையில் திருமண அழைப்பிதழ்
கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரி ஏடியுசி சார்பில் பதிவு தபால்
திருச்சி அருகே  அதிமுக வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
பாதுகாப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள்: மேயர் அன்பழகன் ஆய்வு
திருச்சி மாநகராட்சி பகுதியில் அக். 18ம்தேதி குடிநீர் வினியோகம் ரத்து
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?