/* */

திருச்சியில் வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவர் கைது. 750 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

திருச்சியில்  வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
X
ரேஷன் அரிசி (கோப்பு படம்)

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி எண் 2-ல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வேன் ஒன்றை மடக்கி சோதனையிட்ட போது அதில் 18 மூட்டைகளில், 750 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேசன் கொண்டு சென்றனர். மேலும், வேனில் வந்த அரியமங்கலத்தை சேர்ந்த அக்பர்அலி (வயது 61), இ.பி.ரோடு தேவதானத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 32) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், குடும்ப அட்டைகளுக்கு வினியோகிக்கப்பட்ட ரேஷன் அரிசியை மலிவு விலையில் வாங்கி வேனில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 18 Oct 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!