/* */

திருச்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து உள்ளது.

இதன் காரணமாக ஆங்காங்கே தேங்கியுள்ள மழை நீரை சேகரிப்பதற்காக தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வீடியோ வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் கிராமங்கள்தோறும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பல காட்சிகளுடன் விளக்கமளித்து பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை எடுத்து விளக்கப்பட உள்ளது. துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்படும்.

இந்த வீடியோ பிரசார வாகனத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது திருச்சி மண்டல குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் நாக ஆனந்த், பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 5 Oct 2021 10:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்