திருச்சி கோட்டத்தில் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10 ஆக குறைப்பு

திருச்சி கோட்டத்தில் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10 ஆக குறைப்பு
X
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் (பைல் படம்)
திருச்சி கோட்டத்தில் ரெயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக பிளாட்பாரம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒரு புறம் கொரோனா என்று காரணம் கூறப்பட்டாலும் இந்த பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் கொரோனா தளர்வு காரணமாக தற்போது பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.50-ல் இருந்து ரூ.10-ஆக குறைக்கப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி ரெயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட் ரூ. 10 -க்கு வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture