ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் அஞ்சலி
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொன்மலை ரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 275 பயணிகள் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் கூட்டம் மற்றும் மவுன அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோர ரயில் விபத்தில் அகால மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியும், படு காயமடைந்த பயணிகள் விரைவில் பூரண குணமடைய வேண்டியும், தென்பகுதி இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும், திருச்சி பொன்மலை இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் சார்பாகவும் இன்று மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
மேற்படியான இரங்கல் நிகழ்ச்சியில் தென்பகுதி இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பணிமனை கோட்ட தலைவர் சகோதரர் பவுல் ரெக்ஸ் ,இரகுபதி, துணை பொதுச்செயலாளர் சேசுராஜா, தலைவர் பென்ஷனர் சங்கம், பொன்மலை ரெங்காசாரி, செயலாளர், பென்ஷனர் சங்கம், பொன்மலை ஏகாம்பரம், துணை தலைவர், ஜார்ஜ் ஸ்டீபன், பாலமுருகன், கோட்ட துணைத்தலைவர், ஞானசேகர்,உதவி கோட்ட செயலாளர், முகமது கோரி, உதவி கோட்ட செயலாளர் வெங்கட் நாராயணன் மற்றும் ஏராளமான முன்னாள் இந்நாள் நிர்வாகிகள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியபடி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் ரயில்வே குடும்பத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மெழுகுவரத்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu