திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள், பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அவர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பட்டா மாறுதல், குடும்ப அட்டை பெயர் மாற்றம் செய்தல், முதியோர் உதவித்தொகை, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் நிலம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக சுமார் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future