திருச்சியில் சொத்து தகராறில் தங்கையை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
திருச்சி கோட்டை காவல் நிலையம் (கோப்பு படம்)
திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டார் வீதி மூக்கப் பிள்ளை சந்தை சேர்ந்தவர் சந்தானராஜ். இவரது மகன் லூர்து வின்சென்ட் (வயது 24). இவரது தங்கை திவ்ய கிரிஸ்டில்லா (வயது 22).
லூர்து வின்சென்ட் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது தந்தை வீட்டோடு இருந்து வருகிறார். இந்நிலையில் சொத்து பிரச்சினை தொடர்பாக அவரது தாயிடம் தகராறு செய்து, ஆபாசமாக திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகராறை விலக்கிவிட வந்த தங்கை திவ்ய கிறிஸ்ட்டில்லாவை அவரது அண்ணன், லூர்து வின்சென்ட் தாக்கியதில் அவருக்கு காயமடைந்ததையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திவ்ய கிறிஸ்டில்லா கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu