திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சியில் பேராசிரியர் அன்பழகனின் 100-வது பிறந்த நாள் விழா தி.மு.க.வினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தி.மு.க. மறைந்த முன்னணி தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகனின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள தி.மு.க. முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் அவரது உருவ படத்திற்கு தி.மு.க. வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, வழக்கறிஞர் பாஸ்கர், விஜயா ஜெயராஜ் , டோல்கேட் சுப்ரமணி, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், இளங்கோ, வழக்கறிஞர் கவியரசன் மற்றும தி.மு.க. நிர்வாகிகள் போட்டோ கமால், இளையராஜா, சுரேஷ் எம்.ஆர்.எஸ்.குமார், கார்த்திக், மாணிக்கம், சந்திரன், பழனி, கருமண்டபம் சுரேஷ், பரமசிவம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story