தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மெகா பரிசு மழை

கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில் 200 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் திருச்சி மாநகரத்தில் மட்டும் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் நடமாடும் மருத்துவ குழுவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியின் போது நாளை தடுப்பூசி செலுத்திக்கொள்ள டோக்கன்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், 2, வது பரிசாக இரண்டு பேருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவை, 3, வது பரிசாக மூன்று நபர்களுக்கு தங்கநாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட கோ-அபிஷேகபுரத்திற்கு உட்பட்ட 19 பேர் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சைக்கிள், பட்டுப்புடவை, ஹாட் பாக்ஸ், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu