திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சியில் நாளை (15.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

110/11 KV மணிகண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (15.07.2024) திங்கட்கிழமை அன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மணிகண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை மெயின் ரோடு, ஹௌசிங் போர்டு, பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிக்கண்டம், எவெரெஸ்ட் ஸ்டீல், தென்றல் நகர், அம்மையப்ப நகர், தீரன் மாநகர் ஆகிய பகுதிகளில் நாளை (15.07.2024) காலை 9:45 மணி முதல்மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

அதே போல் 33/11 KV வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை (15.07.2024) திங்கட்கிழமை அன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வரகனேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் தஞ்சை ரோடு, மஹாலக்ஷ்மி நகர், வடக்கு தாராநல்லூர், மரியம் தெரு, வரகனேரி, மல்லிகைபுரம்,EDAST, அன்னை நகர் 1-6 கிராஸ், இருதயபுரம், குழுமி கரை, நடு தெரு, அக்ராஹாரம் , தோப்பு தெரு, தெற்கு பிள்ளையார் தெரு ஆகிய பகுதிகளில் நாளை (15.07.2024) காலை 9:45 மணி முதல்மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story