Begin typing your search above and press return to search.
போலீசாரால் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்
வடமதுரை போலீசாரால் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டு நேற்று திருச்சியை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மதுரை வாடிப்பட்டி அலங்காநல்லூர் கல்லணை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர் மீது வடமதுரை போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதும், அந்த வழக்கில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. அதன் பேரில், அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் மணிகண்டனை ஒப்படைத்தனர்.