திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி 10 பேர் மீது குண்டர் சட்டம்

திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி  10 பேர் மீது குண்டர் சட்டம்
X

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.

திருச்சி நகரில் பத்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , பணம், செல்போன் பறிப்பு, பாலியல் வன்முறை, கஞ்சா விற்பனை மற்றும் கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் போலீசார் ரோந்து செய்தும், வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

அதன்படி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் அரவிந்த் மற்றும் சூர்யா ஆகியோர் மீது கடந்த 5.11.2021– ந்தேதியும் , பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் மற்றும் சரத் என்கிற ரத்தினசாமி ஆகியோர் மீது கடந்த 13.11.2021 – ந்தேதியும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோட்டை காவல்நிலைய எல்லையில் கத்தியை காட்டி பணம் பறித்து சென்ற விக்கி என்கிற விக்னேஷ்வரன் என்பவர் மீது கடந்த 9.11.2021 – ந்தேதியும், கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லையில் செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜாப்ரின் சுரேன் மற்றும் சரத்குமார் ஆகியோர் மீது கடந்த 12.11.2021 – ந்தேதியும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 15 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த கொத்தமங்கலத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மீது கடந்த 3.11.2021 – ந்தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜ்குமார் என்கிற வீரப்பன் என்பவர் மீது 9.11.2021 – ந்தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் .

எடமலைபட்டி புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நியாயவிலைக் கடையில் உள்ள அரிசியை கடத்திய சுரேஷ் என்பவர் மீது கடந்த 6.11.2021 ந்தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாநகரில் இந்த நவம்பர் மாதத்தில் 15 நாட்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் செய்த 10 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture