/* */

திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது

போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக துபாயிலிருந்து திருச்சிக்கு திருப்பி அனுப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது
X

மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). இவர் கடந்த 16-ந் தேதி ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து துபாய்க்கு இந்திய பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்துள்ளார். அங்கு விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிரகாசின் உடைமைகளை சோதனை செய்ததில், அவர் ஸ்பெயின் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் வைத்திருந்த ஸ்பெயின் நாட்டு பாஸ்போர்ட்டை தணிக்கை செய்த துபாய் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிரகாசின் போலியான ஸ்பெயின் நாட்டு பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு, அவரை துபாயில் அனுமதிக்காமல், திருச்சியில் இருந்து பயணம் செய்த அதே ஏர் இந்தியா விமானத்தில் நேற்று அவரை திருச்சிக்கு திருப்பி அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரகாஷ் ஸ்பெயின் நாட்டுக்கு செல்வதற்காக போலியாக ஏஜென்ட் மூலம் வெளிநாட்டு பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரகாசை கைது செய்த ஏர்போர்ட் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?