Begin typing your search above and press return to search.
திருச்சியில் பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவிப்பு
திருச்சியில் பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
HIGHLIGHTS
தந்தை பெரியாரின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு, தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி, கண்ணன், இளங்கோ, வழக்கறிஞர் பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.