நாளை திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம்

நாளை திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம்
X
நாளை திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நாளை 28 ம்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மாநகராட்சி மைய அலுவலக லூர்துசாமி பிள்ளை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். புதிதாக பொறுப்பபேற்றுள்ள ஆணையர் வைத்திநாதன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி இருப்பது, மற்றும் நிதி ஒதுக்கீடு, பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவு படுத்துதல், மழை நீர் வடிகால்கள் அமைத்தல், சாலைப்பணிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

Tags

Next Story
future of ai in retail