/* */

திருச்சியில் மனிதம் டிரஸ்ட் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருச்சியில் மனிதம் டிரஸ்ட் சார்பில் நீர்மோர் பந்தலை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் மனிதம் டிரஸ்ட் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
X

திருச்சி உறையூரில் மனிதம் டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

திருச்சி உறையூர் அருணா தியேட்டர் அருகில் மனிதம் டிரஸ்ட் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார். மனிதம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.தினேஷ் குமார் வரவேற்றுப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நீர்மோர் வழங்கினார். மற்றும் பல்வேறு விதமான பழங்களையும் விநியோகம் செய்தார். மேலும் மனிதம் டிரஸ்ட் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் சமூக தொண்டுகளை பாராட்டி பேசினார். விழாவில் மாநகராட்சி ஐந்தாவது மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் மனிதம் டிரஸ்ட் மேலாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.

Updated On: 21 April 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?