/* */

திருச்சியில் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

திருச்சியில் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட  பணம் மீட்கப்பட்டு ஒப்படைப்பு
X

திருச்சியில் ஆன்லைன் மூலம்  நடந்த மோசடியில் மீட்கப்பட்ட பணத்தை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உரியவரிடம் ஒப்படைத்தார்.

திருச்சி மாநகரம் வயலூர் ரோடு வாசன் வேலியை சேர்ந்த தமிழ்மணி என்பவருக்கு எல்.ஐ.சி. போனஸ் தொகை வந்துள்ளது என்ற செல்போன் அழைப்பை நம்பி வங்கி கணக்கு விவரங்களை கூறியதை தொடர்ந்து ரூ. 47 ஆயிரம் அவரது வங்கி கணக்கில்இருந்து அபேஸ் செய்யப்பட்டிருந்தது.

இதே போல டி.வி.எஸ். டோல்கேட் இக்பால் காலனியில் வசிக்கும் கோமதி என்பவர் பிளிப்கார்டில் டி.வி. ஆர்டர் செய்துள்ளார். அது failed என்று காட்டவே இது குறித்து பிளிப்கார்டு கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். எதிர் முனையில் பேசியவர் any desk app-1 என்ற செயலியை இன்ஸ்டால்செய்ய சொல்லி உள்ளார். இதனை நம்பி இன்ஸ்டால் செய்யவே அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மாயமானது.

இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி இருவரின் பணத்தை மீட்டுக்கொடுத்துள்ளனர். இழந்த பணத்தை திரும்ப பெற்ற மகிழ்ச்சியில் அவர்கள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Updated On: 17 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்