/* */

திருச்சி: தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்லூரி தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரி மாணவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி: தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
X

ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. வகுப்புகள் ஆன்லைனில் நடந்தது. தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. தேர்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பல மாதங்கள் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி விட்டு தற்போது தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நேரடி தேர்வு வைத்தால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். எனவே தமிழக அரசு இந்த செமஸ்டரை ஆன்லைனில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 16 Nov 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு