திருச்சியில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி

திருச்சியில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி
X
திருச்சியில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியானார். 33 பேர் பாதிக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் 33 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 39 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருச்சியில் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 424 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.


Tags

Next Story
ai in future agriculture