/* */

திருச்சி பழைய பால் பண்ணை அருகே கழிவறை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு

திருச்சி பழைய பால் பண்ணை அருகே கழிவறை அமைக்க கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி பழைய பால் பண்ணை அருகே கழிவறை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு
X
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள்.

ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் பழைய பால் பண்ணை இருக்கக்கூடிய இடத்தில் திருச்சியில் இருந்து சென்னை வழியாக செல்லும் புறவழிச்சாலை, தஞ்சைமார்க்கமாக செல்லும் புறவழிச்சாலை, சேலம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் புறவழிச்சாலை அமைந்துள்ளது.24 மணி நேரமும் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வெளியூர்களுக்கும் மாநகர பேருந்தும் வரக்கூடிய இடமாக உள்ளது. இந்த இடத்தில் பொது கழிவறை என்பது கிடையாது. இது சம்பந்தமாக பலமுறை மனு கொடுத்து இருக்கின்றோம். இம்முறையும் மனு கொடுத்துள்ளோம்.

இதில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் உளைச்சலை சந்திக்கின்றனர். எனவே இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக கழிவறை கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Updated On: 27 Dec 2021 3:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. இந்தியா
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு