சென்னையில் இருந்து திருச்சி வழியாக 30-ந்தேதி முதல் சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை

திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளை பெங்களூரு, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் வெளிநாட்டு சேவைகளாக சிங்கப்பூருக்கு இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. சென்னையில் இருந்து திருச்சிக்கு தினந்தோறும் மூன்று விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்த நிலையில் வருகிற 30-ந் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 9 மணிக்கு வரும் இண்டிகோ விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த விமானம் மீண்டும் மறுநாள் காலை 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்து இரவு 10.55 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்லும். இதனால் திருச்சியில் இருந்து சென்னைக்கும், திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கும் கூடுதலாக மேலும் ஒரு விமான சேவை கிடைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu