தேசிய தடகள வீரர் சுவராஜுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் வரவேற்பு

தேசிய தடகள வீரர் சுவராஜுக்கு  திருச்சி ரயில் நிலையத்தில் வரவேற்பு
X

தேசிய தடகள வீர் சுவராஜுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய தடகள வீரர் சுவராஜுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவில் டெல்லியில் அக்டோபர் 11-12-ம் தேதி நடந்த தடகள போட்டியில் 18- வயதுக்கான பிரிவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 48.59 நிமிடத்தில் 2-வது இடத்தில் வெற்றிப் பதக்கம் பெற்றவரும்,அக் 16-ந் தேதி சென்னையில் ஆண்களுக்கான மாநில தடகள போட்டில் 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றவருமான ஏ.சுவராஜ் ரயில் மூலம் இன்று காலை 10 மணியளவில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தார். அவருக்கு திருச்சி இரயில் நிலையத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்கம், மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

வரவேற்பில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு, பொருளாளர் ரவிசங்கர், உதவி செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்சியாளர் சீனிவாசன், மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி. நீலமேகம், ஆர்.கே.ராஜா, பள்ளி பயிற்சியாளர் உமாமகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story