/* */

திருச்சியில் ஆட்டோ மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு

திருச்சியில் ஆட்டோ மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் ஆட்டோ மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு
X

திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன், அடைக்கலமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அப்சலான் (வயது 58). இவர் பாலக்கரை மெயின் ரோட்டில் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே வழியில் வந்த ஆட்டோ ஒன்று அப்சலான் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்சலானை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்சலானின் மனைவி விமலா மேரி கொடுத்த புகாரின் பேரில், திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆட்டோ டிரைவர் சவுகத் அலி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Oct 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி