நடமாடும் கோர்ட் ஆன்லைன் அபராதத் தொகை மோசடி: வக்கீல் கைது

நடமாடும் கோர்ட் ஆன்லைன் அபராதத் தொகை மோசடி: வக்கீல் கைது

பைல் படம்.

நடமாடும் கோர்ட்டு ஆன்லைன் அபராத தொகை மோசடியில் வங்கி முத்திரையை போலியாக தயாரிக்க உதவிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தில் நடமாடும் (மொபைல்) கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. அதன் மாஜிஸ்திரேட்டாக கோபாலகண்ணன் பணியாற்றி வருகிறார்.

இந்த நடமாடும் கோர்ட்டின் இளநிலை உதவியாளராக, திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு (வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார். நடமாடும் கோர்ட் மூலம் கடந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான ஆன்லைன் அபராதத்தொகை ரூ.40 ஆயிரத்தை போலி ஆவணம் மற்றும் போலி வங்கி முத்திரை பதித்து வங்கியில் அளித்து, அத்தொகையை இளநிலை உதவியாளர் பிரபு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு கோபாலகண்ணன், மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த நவம்பர் 30-ந் தேதி பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வங்கி முத்திரையை போலியாக தயாரிக்க உதவிய திருச்சி தீரன்நகரை சேர்ந்த வக்கீல் அரவிந்தனை (44) தேடிவந்தனர். இந்த நிலையில் 50 நாட்களுக்கு பின், போலீசார் வக்கீல் அரவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story