முதல்வர் திறக்க உள்ள திருச்சி முக்கொம்பு கதவணையில் அமைச்சர் நேரு ஆய்வு

முதல்வர் திறக்க உள்ள திருச்சி முக்கொம்பு கதவணையில் அமைச்சர் நேரு ஆய்வு
X

முதல்வர் முகஸ்டாலின் திறக்க உள்ள முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் இன்று ஆய்வு செய்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் திறக்க உள்ள திருச்சி முக்கொம்பு கதவணையில் அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக சுமார் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தவணையை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி திறந்து வைக்கிறார். இதனையொட்டி அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், தியாகராஜன், ஸ்டாலின் குமார் ,சௌந்தரராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture