திருச்சியில் எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை வைத்து மரியாதை செய்தார்.
இதே போல் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் அந்தந்த மாவட்ட அ.தி.மு.க .செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு, அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனையடுத்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இதில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜன்.திருப்பதி, ஜெயம் ஸ்ரீதர், ஸ்ரீரங்கம் நடேசன், ஆமூர் ஜெயராமன், சமயபுரம் ராமு சுந்தரமூர்த்தி தினேஷ். எட்டரை அன்பரசு. மைக்கேல் ராஜ். ஆமூர் சுரேஷ் ராஜா .உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu