எம்.ஜி.ஆர். பிறந்தநாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு

எம்.ஜி.ஆர். பிறந்தநாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு
X

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவன தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் பிறந்த நாளான (17.1.2022 திங்கள் கிழமை) அன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைகளுக்கும், அவரது திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காலை 9:30 மணி- சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர். சிலை,காலை 9.45மணி- குழுமணி எம்.ஜி.ஆ.ர் சிலை,காலை 10.30மணி- பெட்டாவாய்த்தலை.காலை 10: 30மணி- முசிறி கைகாட்டி அண்ணாசிலை அருகில், காலை 11: 30மணி- துறையூர் எம்.ஜி.ஆர். சிலை,காலை 11.45மணி- கரட்டாம்பட்டி எம்.ஜி.ஆர். சிலை. ஆகிய இடங்களில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொள்கிறார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?