/* */

திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மன நல விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் நடந்த மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மன நல விழிப்புணர்வு பேரணி
X

உலக மன நல வாரத்தையொட்டி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.

உலக மனநல தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு தேசிய நல வாழ்வு திட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை, ஸ்ரீ வருத்தாஸ்ரம் ஆகியவை சார்பில் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு மனநலம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி திருச்சி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு இருந்து துவங்கி மத்திய பஸ் நிலையம் வழியாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவ பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு மனநலம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு வந்தனர்.

இதில் அரசு மருத்துவமனை சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஸ்ரீ பிரியா தேன்மொழி,மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மன நல துறை தலைவர் நிரஞ்சனா தேவி, மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி, பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித் துறை தலைவர் ரால்டன், மருத்துவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!