வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு
X

பாலக்கரை காவல் நிலையம்

திருச்சியில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பசுமடத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 54). கடந்த சில ஆண்டுக்கு முன் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி குழந்தைகளுடன் இருந்து பிரிந்து தனியே சென்று விட்டார். இதனால் தனியே வசித்து வந்த தண்டபாணி, குடி பழக்கத்திற்கு அடிமை ஆனார்.

இந்நிலையில் கடந்த 1 வாரமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணியை உறவினர்கள் பார்த்து ஆறுதல் கூறி சென்றனர். கடந்த 3 நாட்களாக தண்டபாணியின் வீடு உள் தாழிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பாலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது, தண்டபாணி, உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story